துப்பாக்கிச் சூடு: முதலமைச்சர் காவல் துறை டி.ஜி.பி., மீது கொலை வழக்குப் பதிவு செய்யுங்கள் - மு.க.ஸ்டாலின்

சென்னை: துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதலமைச்சர், காவல் துறை டி.ஜி.பி., மற்றும் உளவுத்துறை ஐ.ஜி., ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தி.மு.க., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதலமைச்சர், காவல் துறை டி.ஜி.பி., மற்றும் உளவுத்துறை ஐ.ஜி., ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தி.மு.க., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமைதியாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அப்பாவிமக்கள் மீது, திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்துவிட்டு, துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்திப் பேசிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க., அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

துப்பாக்கிச்சூட்டில் 25 முதல் 30 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையை வேண்டுமென்றே பல்வேறு காரணங்களுக்காகக் குறைத்துக் காட்டுகிறார்கள் என்றும் அடுத்தடுத்து பத்திரிக்கை செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மீறும் வகையிலும் ஸ்டெர்லைட் போராட்டத்தை முன் நின்று வழி நடத்தியவர்கள் குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். போலீசாரின் நடவடிக்கை இந்திய தண்டனைச் சட்டம் சொல்லும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவையானதற்கும் அதிகமான துப்பாக்கிகளும் திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளதால், துப்பாக்கிச் சூட்டை தற்காப்பு நடவடிக்கையையும் தாண்டி முக்கிய போராட்டக்காரர்களைக் குறிவைத்துக் கொல்லும் ஆபரேஷன் ஆகவும் மாறிவிட்டது.

இப்படியொரு சதித்திட்டம் அடங்கிய துப்பாக்கிச்சூடு உளவுத்துறை ஐ.ஜி, சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தெரியாமலோ, பேரணியைக் கையாண்ட தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில் சரத்குமார், தென்மண்டல ஐ.ஜி. மகேஸ்குமார் அகர்வால் ஆகியோருக்கு தெரியாமலோ நடைபெற்றிருக்க எள்ளளவும் வாய்ப்பு இல்லை.

ஆகவே, துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் முழு உண்மையான எண்ணிக்கையை உடனடியாக வெளியிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முன்னணித் தலைவர்களைக் குறிபார்த்துச் சுட்டுக்கொன்றது பற்றி விசாரித்து, குறிப்பாக ஓர் இளம்பெண்ணை வாயில் சுட்டுக்கொன்ற இதயமில்லாத காவல்துறையினரை உடனடியாக அடையாளம் கண்டு, அவர்கள் மீதும், சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன், உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில் சரத்குமார், மதுரை மண்டல ஐ.ஜி மகேஸ்குமார் அகர்வால் ஆகியோர் மீதும், இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு உடந்தையாக இருந்து ஒப்புதல் அளித்துக் கூட்டுச்சதி செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும் கொலை வழக்குப் பதிவுசெய்து, நியாயமாக விசாரணை நடத்திட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...