தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நிவாரணத் தொகை அதிகரிப்பு - முதலமைச்சர்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோருக்கு நிவாரணத் தொகையை அதிகரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோருக்கு நிவாரணத் தொகையை அதிகரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த பேரணியில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தன. அரசே தன் மக்களை கொலை செய்வது அரச பயங்கரவாதம் என்று தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி கிடைத்தது. தொடர்ந்து, உயிரிழந்தோர், படுகாயமடைந்தோர் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு 'வகை வகையாய்' நிவாரணத் தொகையை வழங்குவதாக அரசு அறிவித்தது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர்க்கான நிவாரணத் தொகையை அதிகரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கான நிவாரணத் தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலத்த காயமடைந்தோருக்கு ரூ.3 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக நிவாரணத் தொகை அதிகரிக்கப்படும் என்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கான நிவாரணத் தொகை ரூ. 1.5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் மிகுந்த துயரமும், மனவேதனையும் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...