மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதியினர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜெயக்குமார், சுகுணா தம்பதியினர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜெயக்குமார், சுகுணா தம்பதியினர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.

உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார் (42), பகுதி நேர ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவரிடம் திருமலை என்பவர், தான் குடிசை மாற்று வாரியத்தில் வேலை செய்வதாக கூறி வீடு வாங்கி தருவகாக ரூபாய் 20 ஆயிரம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜெயக்குமார் அப்பகுதி மக்களிடமிருந்து வீடு வாங்கி தருவாக கூறி ரூபாய் 12 லட்சம் வரை பணம் பெற்று திருமலைக்கு கொடுத்துள்ளார்.

இதனிடையே, திருமலை அப்பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் ஜெயக்குமாரிடம் தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டுள்ளனர்.



இதனால் மன உளைச்சல் அடைந்த ஜெயக்குமார் காவல் நிலையத்தில் திருமலை குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மனைவி சுகுணாவிடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தார்.



தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர், சிகிச்சைக்காக அவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...