அ.தி.மு.க., ஐ.டி.விங்க் செயலாளர் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு

பத்திரிக்கையாளர்களை தெருநாய் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட விவகாரத்தால், அ.தி.மு.க., ஐ.டி.விங்க் செயலாளர் ஹரி பிரபாகரன் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பத்திரிக்கையாளர்களை தெருநாய் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட விவகாரத்தால், அ.தி.மு.க., ஐ.டி.விங்க் செயலாளர் ஹரி பிரபாகரன் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

தூத்துக்குடியில் கடந்த 22-ஆம் தேதி ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், நேற்று மாநில செய்தி தொடர்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயம் அடைந்தவர்களை பார்க்கச் சென்றார். அப்போது, அவருக்கு பெண்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில், இன்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காயமடைந்தவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினர். அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்க மற்றும் இவர்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக பத்திரிக்கையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 

இந்த நிலையில், அ.தி.மு.க., ஐடி விங்க் செயலாளர் ஹரி பிரபாகரன் பத்திரிக்கையாளர்களை மிகவும் மோசமாக விமர்சித்து டுவீட் வெளியிட்டு இருந்தார். அதாவது, "துணை முதலமைச்சர் மருத்துவமனையில் பார்வையிட்டு இருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் வாசலில்தான் இருக்க வேண்டும். உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு பதிலாக, பிஸ்கட்டுக்கு குலைக்கும் தெருநாய்கள் கேட்டில் தான் கட்டி வைக்கப்படுவார்," எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்தப் பதிவிற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அந்த டுவீட்டை பிரபாகரன் நீக்கினார். இதைத் தொடர்ந்து, கட்சியின் ஒழுங்குக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஹரி பிரபாகரன் விடுவிக்கப்படுவதாக அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது. 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...