உயிரைப் பொருட்படுத்தாத ஆபத்தான குளியல் : கட்டுப்பாடுகளை விதிக்குமா மாவட்ட நிர்வாகம்

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ஆபத்தான சூழலை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதால், உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ஆபத்தான சூழலை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதால், உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். 



வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாக விளங்குவது கூழாங்கல் ஆறு. இங்கு கோடை விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம். இந்த ஆற்றுப் பகுதியின் ஒரு பகுதியில் ஆழமான சுழல் உள்ளது. கடந்த சில வருடங்களில் சுற்றுலா வந்தவர்களில் 3 பேர் சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.



இருப்பினும், இந்தத் தடையை பொருட்படுத்தாமல் ஆபத்தான சுழல் பகுதிக்குள் நுழைந்து குளிப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என்றே சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, கூழாங்கல் பகுதியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்கும் வகையில், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆபத்தான பகுதிகளைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...