பாரம்பரிய கிராமிய கலைகளை பொதுமக்களுக்கு கற்றுத்தரும் மனிதநேயமிக்க தலைமை ஆசிரியர்

கோவை: கோவையில் பாரம்பரியமிக்க கிராமிய கலைகளை பொதுமக்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கும் தலைமை ஆசிரியரின் செயலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கோவை: கோவையில் பாரம்பரியமிக்க கிராமிய கலைகளை பொதுமக்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கும் தலைமை ஆசிரியரின் செயலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

கோவை கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (48) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அதே சமயத்தில், சங்கமம் கலைக்குழுவின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். கிராமிய கலைகள் மீது இருந்த ஆர்வம் காரணமாக 1990-ம் ஆண்டு முதல் கிராமிய கலைகளைக் கற்றுக்கொண்டார். அதன்பின், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு இக்கலையின் மீது ஆர்வத்தைத் தூண்டவும் 2010-ம் ஆண்டு சங்கமம் கலைக்குழு ஒன்றை ஆரம்பித்தார். 



அச்சங்கம் மூலம் கடந்த 8 ஆண்டுகளாக 850 கிராமிய கலைஞர்களை உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு இலவசமாக பயிற்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து கனகராஜ் கூறுகையில், "இந்தக் கலை மூலமாக நல்ல பழக்கங்களையும், நல்ல உறவையும் கொண்டு வர முடியும். 



இந்தக் கலையை கற்றுக்கொண்டால் மன உளைச்சல் இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். அதுமட்டுமன்றி பாட்டுபாவடை, வேட்டி போன்றவை இக்கலையில் பயன்படுத்தப்படுவதால் பாரம்பரிய உடைகள் மீது மக்களுக்கு ஆர்வம் வரும்.

இறைவழிபாடு செய்து வணக்கம் வைத்து தொடங்கப்படுவதால், இக்கலையைப் பயின்றோர் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். சாதி, மதம் என இன வேறுபாடின்றி இக்கலையை மக்கள் கற்றுக்கொள்வதால், சமத்துவம் மக்களிடையே உருவாகிறது. சமூக பிரச்சனைகளை மக்களிடையே எடுத்துக் கூறுவதற்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இக்கலை பயன்படுகிறது. கல்வி பாடத்திட்டத்தில் இக்கலை குறித்து பாடம் சேர்க்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்றார்.



கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் என்ற கிராமத்தில் இவரிடம் ஒயிலாட்டத்தைக் கற்றுக்கொண்ட 4 வயது குழந்தைகள் முதல் 60 வயது பெரியவர் வரை 80 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஒயிலாட்டத்தை அரங்கேற்றம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...