மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சூடு வைத்துக் கொடுமை : மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை: கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமை செய்ததாகப் பக்கத்து வீட்டுக்காரர் மீது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

கோவை: கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமை செய்ததாகப் பக்கத்து வீட்டுக்காரர் மீது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். 

பூமார்கெட் அருகே உள்ள தெப்பக்குளத்தில் வசித்து வருபவர் சூர்யபிரகாஷ், பெரியமுத்து தம்பதியின் மகன் அரவிந்த் (12). மனநலம் பாதிக்கப்பட்ட இவர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர்கள் வீட்டுக்கு முன்பு வசித்து வருபவர் செல்வராணி. இவர் மனநலம் பாதிக்கப்பட்ட அரவிந்தின் முகத்தில் சூடு வைத்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல, தொடர்ந்து, தனது மகனைக் கொடுமை செய்து வந்ததாகக் கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரிக்காமல் அதனை விட்டுவிடச் சொல்லி சமாதானம் தெரிவித்துள்ளனர்.

இதனால், அதிருப்தியடைந்த அரவிந்தின் பெற்றோர்கள், செல்வராணியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...