தூய்மை தொழிலாளர் சார்பாக தேசிய தூய்மை தொழிலாளர் ஆணையத்திடம் மனு

கோவை: சமூகநீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பாக கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மாணியிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.


கோவை: சமூகநீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பாக கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மாணியிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர் நலன் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு, டெல்லியிலிருந்து வந்திருந்த தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மாணி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு), மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர் நலச் சங்கங்கள் ஆகியோர் பங்கேற்றனர்.



இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர்களின் நலன் மற்றும் கோரிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

இதனையடுத்து, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்குதல், குடியிருப்புகள் ஒதுக்குதல், தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், உயிருக்கு ஆபத்தான துப்புரவு பணிகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகநீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பாக தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சமூகநீதிக்கான இளைஞர்கள் சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவதைத் தடை செய்தல் சட்டம் 2013-ன் படி, மத்திய அரசு சார்பாக 3000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. 

ஆனால், அவை தூய்மை பணியாளர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. மலக்குழி மரணங்கள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. முறையான விளம்பரம் செய்யாமல், தூய்மை பணியாளர் கணக்கெடுப்பு பணியை செய்து முடித்து, கோவை மாநகரில் மிகக் குறைந்த அளவில் தூய்மை தொழிலாளர்கள் பணிபுரிவதாக மாநகராட்சி நிர்வாகத்தால் கணக்கு காட்டப்பட்டுள்ளது. 

இவை அனைத்தையும் தேசிய தூய்மை தொழிலாளர் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினர் உறுதியளித்துள்ளார்." என்றார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...