பலத்த காற்றுக்கு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்நிறுத்த அரங்கின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து

கோவை: கோவையில் வீசிய பலத்த காற்றுக்கு பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் திருத்தேர் நிறுத்தும் அரங்கின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவையில் வீசிய பலத்த காற்றுக்கு பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் திருத்தேர் நிறுத்தும் அரங்கின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயமும் ஒன்று. திருப்புகழ் பாடப்பெற்ற இக்கோவிலில் திருத்தேரும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில் உத்திர தேர்த்திருவிழாவின் போது மட்டுமே, தேர் அப்பகுதியை வலம் வரும். மற்ற நேரங்களில் கோவிலுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருக்கும். 



இந்த நிலையில், பேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக் காற்று வீசியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே, பட்டீஸ்வரர் ஆலயத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தேரின் திருப்பனை எனப்படும் மேற்கூரை காற்றுக்கு பறந்து சென்று விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாகக் கோவிலிற்கு சுவாமி கும்பிட வந்தவர்கள், அங்கு கடை வைத்திருப்பவர்கள் என பொதுமக்கள் யாரும் எவ்வித காயமுமின்றி தப்பினர். 



இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில், கோவில் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று கயிரைக் கட்டி, அங்கு யாரும் நுழையாதவாறு தடுத்து நிறுத்தினர். பின்னர், அந்த தடுப்பனை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது :- சுமார் 2 மணியளவில் பலத்த காற்று வீசியது. இதனால், கோவிலின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் விரைந்து வந்து மின்கம்பத்தில் கயிறு கட்டி, பொதுமக்கள் யாரையும் நுழையாமல் தடுத்தனர். பின்னர், மேற்கூரைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர், என்றார். 

இதனிடையே, பழம் பெருமை மிக்க பட்டீஸ்வரர் ஆலயத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.



Video: M.Balaji

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...