அன்னூர் புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம்: எவ்வித முன்னறிவிப்புமின்றி அன்னூர் புறவழிச்சாலை சாலை திட்டத்திற்காக விளை நிலங்கள் கையகப்படுத்த முயற்சிகள் நடப்பதாக புகார் தெரிவித்து அன்னூர் பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம்: எவ்வித முன்னறிவிப்புமின்றி அன்னூர் புறவழிச்சாலை சாலை திட்டத்திற்காக விளை நிலங்கள் கையகப்படுத்த முயற்சிகள் நடப்பதாக புகார் தெரிவித்து அன்னூர் பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை - சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரியாம்பாளையம் பிரிவு முதல் அன்னூர் மேட்டுப்பாளையம் வரை சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவிற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது.

இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்களில் அளவு கற்களை நடும் பணி நடைபெற்றுள்ளது. இதில் பெரும்பாலான நிலங்கள் விவசாய பூமிகளாகும். தங்களது நிலங்களை சாலைப்பணிக்காக எடுத்துக் கொள்வது குறித்து தங்களிடம் கருத்து கேட்பு கூட்டமோ அல்லது எவ்வித முன்னறிப்பு நோட்டீசோ கூட இதுவரை வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் எந்த காரணத்தை முன்னிட்டும் எங்களது விவசாய நிலங்களை விட்டுத்தர இயலாது என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அன்னூர் பகுதி விவசாயத்தைக் காக்கும் வகையில் புறவழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும், புறவழிச்சாலை திட்டத்திற்கு பதிலாக மேம்பாலங்கள் கட்டுவதன் சாலை இணைப்பு பணியை தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்து முழக்கமிட்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...