ரஜினிக்கு தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் பற்றி தெரியாது - வைகோ

மேட்டுப்பாளையம்: ரஜினிக்கு தமிழகத்தின் சுற்றுச்சூழல் ஆபத்து குறித்தோ தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் குறித்தோ எந்த அரிச்சுவடியும் தெரியாது என்று ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


மேட்டுப்பாளையம்: ரஜினிக்கு தமிழகத்தின் சுற்றுச்சூழல் ஆபத்து குறித்தோ தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் குறித்தோ எந்த அரிச்சுவடியும் தெரியாது என்று ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பவானி நதி மாசடைதல் குறித்த விழிப்புணர்வு புத்தக வெளியீட்டு விழாவில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.



நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது தேச துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது. மத்திய அரசின் உளவுத் துறையின் தூண்டுதலின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டால் இந்தியாவின் ஒற்றுமை சிதையும் என்றால் ராஜ துரோகமா? இது ராஜ துரோகம் என்றால் இந்தியாவின் ஒற்றுமை சிதையும் என ஆயிரம் முறை கூறுவோம். இது போன்ற வழக்குகளால் பயமுறுத்த இயலாது.

தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தோ அல்லது தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் பற்றியோ ரஜினிக்கு எந்த அரிச்சுவடியும் தெரியாது. ஐம்பதாயிரம் மக்கள் திரண்ட ஸ்டேர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் எந்த போலீசாவது தாக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார்களா? சுட்டுக் கொல்லப்பட்ட பெண்கள் சமூக விரோதிகளா? தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடக்கூடாது என்று தான் நாங்கள் போராடுகிறோம்.

அவர் கூறியுள்ள அறிவுரைகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ரஜினியின் கருத்து கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களைக் காயப்படுத்தியுள்ளது என்பதை அவர் என்றாவது உணர்வார்." என்றார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...