வால்பாறையில் கோடைவிழா நடக்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் இந்த ஆண்டு கோடை விழா நடைபெறாததால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் இந்த ஆண்டு கோடை விழா நடைபெறாததால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். 

7-வது சொர்க்கம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தேயிலை, காப்பி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியோடு, பசுமையாகவும் வெள்ளிக்கொடி போல் கண்களுக்கு விருந்தளிக்கும் பல அருவிகளின் ரம்மியான காட்சியும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது. 



குறிப்பாக, சோலையார் அணை, நீரார் அணை, சின்னக்கல்லார் அணை, கூழாங்கல் ஆறு, நலமுடி காட்சி முனை, சக்தி தலநார் காட்சிமுனை, பிர்லா பால்ஸ், பாலாஜி கோவில், அக்காமலை புல்மேடு என இன்னும் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் வால்பாறையில் காணப்படுகிறது. இந்தப் பகுதிகளை காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வால்பாறைக்கு பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில், இங்கு ஆண்டுதோறும் கோடைகால விடுமுறையான மே மாதத்தில் கடைசி வாரம் கோடைவிழா நடத்துவது வழக்கமாகும். ஆனால், இந்த வருடம் மே மாதம் இறுதி வாரம் ஆகியும், இதுவரையிலும் கோடை விழா நடத்துவது பற்றி அரசு சார்பில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். 

வால்பாறை பகுதியில் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத நிலையில், வருடந்தோறும் நடைபெறும் கோடை விழாவில் நடத்தப்படும், கலைநிகழ்ச்சி மற்றும் பல்வேறு துறைகளால் நடத்தப்படும் கண்காட்சி போன்றவற்றை கண்டு மகிழ்ச்சிடைந்து வந்தனர். இந்நிலையில், இந்த வருடம் கோடைவிழா நடத்தப்படாதது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அடுத்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்திலேயே கோடை விழா நடத்த வேண்டும் என்று பள்ளிக்குழந்தைகளும், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...