அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டுபிடிக்க, 'சூயஸ்' நிறுவனம் களஆய்வு

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டறியும் ஆய்வில் மாநகராட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 'சூயஸ்' என்கிற தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டறியும் ஆய்வில் மாநகராட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 'சூயஸ்' என்கிற தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக, வீடு வீடாகச் சென்று குடிநீர் பயன்பாடு மற்றும் விநியோக அளவு பற்றிய தகவல்களை திரட்டும் பணிகளை தனியார் நிறுவனம் செய்து வருகின்றது. கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில், அணைகளில் இருந்து தற்போது பெறப்படும் குடிநீர் அளவு, குடியிருப்புகள் மற்றும் வர்த்தக இணைப்புகளுக்கு விநியோகிக்கப்படும் அளவுகள் குறித்த தகவல்கள் கண்டறியப்படுகின்றன. இதற்காக, மூன்று குழுக்கள் சூயஸ் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த ஆய்வில், வீட்டின் உரிமையாளர் பெயர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, குடிநீர் இணைப்பு எண், எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது, குடியிருப்பு பகுதியின் மொத்த மக்கள் தொகை, வர்த்தக இணைப்புகளின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு பதியப்படுகிறது.

குடியிருப்பு மற்றும் வர்த்தக இணைப்பு என்று மொத்தம் இரண்டு லட்சம் இணைப்புகளுக்கு மட்டுமே மாநகராட்சி அதிகாரப்பூர்வ இணைப்பு வழங்கியுள்ளது. ஆனால், நகரின் ஏராளமான பகுதிகளில் மாநகராட்சி அனுமதியின்றி உருவாக்கப்பட்டுள்ள இணைப்புகளால் பல லிட்டர் குடிநீர் திருடப்படுகிறது.

இதைக் கண்டறிந்து தக்க நடவடிக்கைகள் எடுக்கவும், குடிநீர் விநியோகத்தை சீர் செய்யவும் தற்போது நடத்தப்பட்டு வரும் ஆய்வின் முடிவுகள் உதவும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...