வேளாண் பொறியியல் மாணவர்களுக்கான 30 நாள் பயிற்சி கருத்தரங்கு தொடக்கம்

நீலகிரி: வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் நிலங்களில், நீர்ப்பிரி முகடுப் பகுதி மேலாண்மை பற்றிய 30 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு உதகையில் இன்று தொடங்கியது.

நீலகிரி: வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் நிலங்களில், நீர்ப்பிரி முகடுப் பகுதி மேலாண்மை பற்றிய 30 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு உதகையில் இன்று தொடங்கியது.



இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், தமிழகம் மட்டுமின்றி குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, சிக்கிம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த 70 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இப்பயிற்சியில் வேளாண் நிலங்களில் மண் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால் ஓடைகள் பராமரிப்பு, மழைநீர் சேமிப்பு மற்றும் கழிவுநீர் கட்டமைப்பு போன்றவற்றிற்காக இடம் தேர்வு செய்தல் மற்றும் வடிவமைத்தல் போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன.



மேலும், செய்முறை விளக்கம் மற்றும் களப்பயிற்சியாக மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால் ஓடைகள், மழைநீர் சேமிப்பு மற்றும் கசிவுநீர் கட்டமைப்பு ஆகியவற்றை வடிவமைத்தல், அதன் செலவுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் திட்ட அறிக்கை தயார் செய்வது போன்றவையும், வனச்சரகர்கள் நீர்ப்பிரி முகடு பகுதியில் களப்பயிற்சியை மேற்கொண்டு மாதிரி திட்ட அறிக்கையை தயார் செய்யவுள்ளனர்.



Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...