ஒப்பந்த ஊழியர் பலியான சம்பவம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



உடுமலை அருகே சாலைப்புதூர் பகுதியில் புதிய மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் மாசனி (42) மின்சாரம் தாக்கி நேற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை பார்க்க மின்வாரிய உயர் அதிகாரிகள் வராததைக் கண்டித்தும், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கக் கோரியும் உடுமலை அரசு மருத்துவமனையில் மாசானியின் உடலை வாங்க மறுத்து ஒப்பந்த ஊழியர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஒப்பந்த தொழிலாளர் நாகராஜ் கூறுகையில், "அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் சரியாக நிறுத்தப்படாமல், எங்களுடன் பணியாற்றிய மாசனி என்பவர் பலியானார். அவரது உடலைப் பார்க்க கோவை மண்டத்திலிருந்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவராவது வரவேண்டும். மாசனியின் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பு அளிக்க உறுதி கொடுக்க வேண்டும். இச்சம்பவத்திற்கு காரணமான அதிகாரியை போலீசார் கைது செய்ய வேண்டும். இல்லையெனில், உடலை வாங்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்," என்றார்.



மாசனியின் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், ஐநூறுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் உடுமலை அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...