ஊட்டி - கேட்டி இடையே நாளை முதல் வார இறுதிச் சுற்றுலா ரயில் இயக்கம்

நீலகிரி: ஊட்டி - கேட்டி இடையே இயக்கப்படும் வார இறுதி வட்டச் சுற்றுலா மலை ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது.


நீலகிரி: ஊட்டி - கேட்டி இடையே இயக்கப்படும் வார இறுதி வட்டச் சுற்றுலா மலை ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் உ. சுப்பாராவ் அறிவித்தபடி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நீலகிரி மலை ரயில், ஊட்டி மற்றும் கேட்டி இடையே இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நாளை (ஜுன் 02) முதல் வார இறுதி வட்டச் சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் ஒரு முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்பு இணைந்த ரயில்பெட்டியும் (16 முதல்வகுப்பு + 36 இரண்டாம் வகுப்பு, மொத்தம் 52 இருக்கைகள்), ஒரு இரண்டாம் வகுப்பு ரயில்பெட்டியும் (30 இருக்கைகள்) மொத்தம் 82 இருக்கைகள் இருக்கும்.

உதகையில் இருந்து மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு, கேட்டிக்கு 3.00 மணிக்கும், கேட்டியில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு 4.00 மணிக்கு உதகைக்கும் வந்தடையும்.

இந்த ரயிலின் கட்டணங்கள் முதல் வகுப்பு ரூ. 400. இரண்டாம் வகுப்பு ரூ. 200. இக்கட்டணத்தில் ஒரு சமோசா, ஒரு கப் வெஜிடபிள் சூப், ரயில்வே சின்னம் பொறித்த ஒரு தொப்பி, நீலகிரி மலைரயில் பற்றிய ஒரு சிறு கையேடு மற்றும் ஒரு பேப்பர் பை ஆகியவை வழங்கப்படும். சுற்றுலாப் பயணிகள் இந்த வட்டச் சுற்றுலா ரயில் பயணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதனிடையே, கோவை - பெங்களூரூ இடையே இரண்டு அடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில்சேவை வரும் 10-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையொட்டி, ரயில்வே பிராந்திய ரயில்வே மேலாளர் சுப்பாராவ் கோவை ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.



Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...