மேட்டுப்பாளையத்தில் வங்கியில் கொள்ளை முயற்சி: எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே மர்ம நபர்கள் சிலர் எஸ்.பி.ஜ வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே மர்ம நபர்கள் சிலர் எஸ்.பி.ஜ வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கெம்மநாயக்கன்பாளையத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பல்வேறு மில் அதிபர்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் வங்கியின் அபாய சங்கு ஒலித்தது.



இதனையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு செல்கையில் வங்கியில் இருந்து மர்ம நபர்கள் ஓடியுள்ளதை பார்த்தனர். இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் வங்கியின் முன்பக்க ஷட்டரை உடைத்த கொள்ளையர்கள் உள்ளே புகுந்து லாக்கரை உடைக்க முயன்றதும், அப்போது அபாய ஒலி ஒலித்ததால் அவர்கள் தப்பி ஓடியதும் தெரிய வந்தது. 



மேலும், வங்கியில் பதிவான ரகசிய காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளையர்கள் ஓடும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி மற்றும் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ள போதும் காவலாளி இல்லாததால் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். 

மேலும், கொள்ளைச் சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேரத்தில் போலீசார் அதிகளவில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...