உதகையில் பூமிக்கு அடியில் இருந்து மீண்டும் வெளியேறிய புகை: பொதுமக்கள் அச்சம்

நீலகிரி: உதகை அருகே உள்ள நீத்திபகுதியில் சில மாத இடைவெளிக்குப் பிறகு பூமிக்கு அடியில் இருந்து மீண்டும் புகைவெளியேறி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி: உதகை அருகே உள்ள நீத்திபகுதியில் சில மாத இடைவெளிக்குப் பிறகு பூமிக்கு அடியில் இருந்து மீண்டும் புகைவெளியேறி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள தலைக்குந்தா முத்தநாடு மந்துவில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். முத்தநாடு மந்து அருகேயுள்ள நீத்திபகுதி வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். இங்கு கற்பூரம் உட்பட பலவகை மரங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் கடந்த 2007 மே மாதம் நிலத்தடியில் இருந்து புகை வெளியேறியது. அதன்தொடர்ச்சியாக, கடந்த ஏப்ரல் 27/ம் தேதி நிலத்தடியில் இருந்து புகை வெளியேறியதால் செடி, கொடிகள் கருகியது. 

இதனைத் தொடர்ந்து, நிலத்தடியில் இருந்து வெளியேறும் புகை தொடர்பாக புவியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் நிலத்தடியில் இருந்து மீண்டும் புகை வெளியேறி வருகிறது. 



இதற்கு என்ன காரணம் என்று வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, முத்தநாடு மந்து பகுதியில் உள்ள நிலத்தடி மண் மிக இளகியதாக இருப்பதால், விரிசல்கள் பலமாக உள்ளன. தற்போது, மழை பெய்து வரும் நிலையில், பூமிக்கு அடியில் செல்லும் மழை நீர் வெப்பமாகி, புகை வெளியேறுவதைப் பார்க்க முடிகிறது. இதனால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது என புவியியல் துறையினர் கூறியுள்ளனர், இவ்வாறு தெரிவித்தனர். 



இதனிடையே, இப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் இறந்துள்ளதாகப் பழங்குடியின மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இப்பகுதியில் இருந்து ஒரு வகையான துர்நாற்றத்துடன் புகை வெளியேறுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...