கர்நடகத்தில் 'காலா'வுக்கு தடை என்பதை ஏற்க முடியாது: கோவையில் அமைச்சர் வேலுமணி பேட்டி

கோவை: ரஜினிகாந்த் காவிரி பிரச்சனை தொடர்பாக குரல் கொடுத்ததால் காலா படதிற்கு கர்நாடகாவில் தடை என்றால், அதனை விட முடியாது என்றும் கர்நாடக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

கோவை: ரஜினிகாந்த் காவிரி பிரச்சனை தொடர்பாக குரல் கொடுத்ததால் காலா படதிற்கு கர்நாடகாவில் தடை என்றால், அதனை விட முடியாது என்றும் கர்நாடக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி நீர் சரியாக வரக்கூடிய வாய்ப்பை பெற்று தந்தவர் அவர் தான்.

கோவையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

காலா திரைப்படம் கர்நாடகாவில் திரையிட தடை செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது.

திரைப்படத்தை ஏற்பது குறித்து பொதுமக்கள் முடிவு செய்வார்கள்.

ரஜினிகாந்த் காவிரி பிரச்சனை தொடர்பாக குரல் கொடுத்ததால் இந்த தடை என்றால் அதனை விட முடியாது.

காலா திரைப்படம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையம் உரிய முறையில் விசாரணை நடத்தும். 99 நாட்கள் அமைதியாக நடைபெற்ற போராட்டம்,100-வது நாளில் வன்முறையாக மாறியுள்ளதையே நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களை இழிவு படுத்திய நடிகர் எஸ்.வி.சேகர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...