மேட்டுப்பாளையத்தில் நாட்டு வெடிகுண்டில் சிக்கி வாயில்லா ஜீவன்கள் பலியாகும் பரிதாபம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வேட்டைக்காரர்கள் வைக்கும் நாட்டு வெடிகுண்டில் சிக்கி வாயில்லா ஜீவன்கள் பலியாவதை தடுக்க வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வேட்டைக்காரர்கள் வைக்கும் நாட்டு வெடிகுண்டில் சிக்கி வாயில்லா ஜீவன்கள் பலியாவதை தடுக்க வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள இலுப்பநத்தம் என்னும் கிராமத்தில் இன்று காலை மேய்ச்சலுக்கு சென்ற நடராஜன் என்பவருக்குச் சொந்தமான பசுமாடு ஒன்று வேட்டைக்காரர்கள் வைத்த நாட்டு வெடிகுண்டில் சிக்கி அதன் தாடைப்பகுதி முழுவதும் சிதறி உயிரிழந்தது.



இது குறித்து, நடராஜன் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். மூன்று மாத சினையுடன் உள்ள பசுமாடு கொடுமையான முறையில் இறந்துள்ளது என வேதனை தெரிவிக்கும் இப்பகுதி விவசாயிகள், "வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றியை வேட்டையாடும் கும்பல் இது போன்ற ஆபத்தான வெடிகுண்டுகளை மறைத்து வைக்கின்றனர். இதனை மனிதர்கள் அறியாமல் மிதித்தாலும் வெடித்து கால்களை இழக்க நேரிடும்." என்றனர்.

இதே போன்று மற்றொரு அதிர்ச்சியாக இன்று கோவையில் உள்ள நரசீபுரம் பகுதியில் பன்றிக்கு வைத்த நாட்டு வெடிகுண்டில் சிக்கி ஒன்றரை வயது குட்டி காட்டு யானையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த தகவல் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வெடிகுண்டு

இது குறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், "சற்று அழுத்தம் கொடுத்தாலும் பயங்கரமாக வெடித்து சிதறும் வகையில் இந்த நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்படுகிறது." வெடி மருந்தை உருட்டி அதனை சுற்றி சிறு சிறு வெங்கிக்சான் கற்கள் என்னும் வெள்ளை நிற கற்களை போட்டு அதன் மீது மக்கா சோளமாவு அல்லது கோழி குடல், மாட்டு இறைச்சியின் கொழுப்பு போன்றவற்றை சுற்றி இந்த வெடிகுண்டு தயாரிக்கப்படுகிறது.

இதன் வாசத்தின் காரணமாக காட்டுப்பன்றி இதனை கடித்தால் உடனடியாக தலை சிதறி இறந்து விடும். அவுட்டுக்காய் என்றழைக்கப்படும் இந்த நாட்டு வெடியில் சிக்கி கடந்த ஓராண்டில் மட்டும் நான்கு காட்டு யானைகள் பலத்த காயமடைந்து ஓரிரு தினங்களில் இறந்து போன சம்பவகங்ளும் நடந்துள்ளன.

கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிறுமுகை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக பகுதிகளில் இந்த வேட்டை கும்பல் அதிகளவில் நடமாடி வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட யானை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் பலத்த காயத்தோடு அடர்ந்த காட்டுக்குள் ஓடி உணவு உண்ண இயலாமல் இறப்பது கணக்கிலேயே வருவதில்லை.

என்றாவது ஒருநாள் மட்டும் வேட்டையில் ஈடுபடுவோரை பிடித்து வழக்கு போடுவது என்பதோடு இல்லாமல், தீவிர விசாரணை நடத்தி இது போன்ற வேட்டைக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...