அதிக மாணவர்களை ஏற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்: போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை

சென்னை: பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் குறித்த அளவுக்கு மேல் மாணவர்களை ஏற்றி பயணிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது.


சென்னை: பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் குறித்த அளவுக்கு மேல் மாணவர்களை ஏற்றி பயணிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக 30,500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை தவிர, மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பெரும்பாலும் தனியார் வேன்கள் மற்றும் ஆட்டோக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.



அவ்வாறு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு 16 விதிமுறைகள் உள்ளன. இந்த 16 விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறதா? என ஆண்டுதோறும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் விதிமுறை மீறல் இருந்தால் வாகனங்களுக்கான பர்மிட்டை ரத்து செய்து போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஆட்டோ, ஷேர் ஆட்டோ மற்றும் ஆம்னி வேன்களில் அதிக மாணவர்களை ஏற்றிச் செல்வதை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஆட்டோக்களில் பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது. இதேபோல், பெரிய வேன் வகைகளில் 17 பள்ளி சிறுவர்களுக்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்களின் பர்மிட் சஸ்பெண்ட் செய்து, வாகனங்களையும் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...