கோவில்களுக்கு அருகே உள்ள கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக கோவில்களுக்கு அருகே உள்ள கடைகளை அகற்ற வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: தமிழக கோவில்களுக்கு அருகே உள்ள கடைகளை அகற்ற வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அங்கிருந்த 36 கடைகள் எரிந்து சாம்பலாகின. ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலிருந்த கடையில் ஏற்பட்ட மின்கசிவே விபத்திற்கான காரணம் என்று கூறப்பட்டது. 



இது போன்ற விபத்துகள் வேறு எந்தக் கோயிலிலும் ஏற்படக்கூடாது என்று அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36,000 கடைகளை அகற்ற அரசு உத்தரவிட்டது. இந்து சமய அறநிலையத்துறை இதனை கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. 

இதனையடுத்து, அறநிலையத்துறை சார்பில் தமிழக கோவில்களுக்கு அருகில் இருக்கும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. மாற்று இடம் வழங்காமல் கடைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 

இந்நிலையில், கடைகளை அகற்ற மேலும் கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வருபவர்களை உடனடியாக அப்புறப்படுத்துவது கடினம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், வரும் ஜனவரி 1-ம் தேதிக்கு முன்னதாக கடைகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், கடை உரிமையாளர்கள் நான்கு வார காலத்திற்குள் விண்ணப்பித்தால் மாற்று இடம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...