தனியார் தொழிற்சாலையால் பாதிப்பு: கோவை மக்கள் ஆட்சியரிடம் புகார்

கோவை: தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கருமண் மூலம் பாதிப்பு ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மலுமிச்சம்பட்டி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கருமண் மூலம் பாதிப்பு ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மலுமிச்சம்பட்டி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை அடுத்த மலுமிச்சம்பட்டி ராஜகணபதி நகர், ரேவதி நகர், மற்றும் திருவள்ளுவர் நகர் அமைந்துள்ள பகுதியில் பி.சி அண்டு சன்ஸ் என்ற தனியார் பவுண்டரி செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து கரும்புகையுடன் கலந்து கருப்பு மண் வெளியேறுவதாக கூறப்படுகிறது.



அந்த மண் நச்சுத் தன்மை கொண்டதாக இருப்பதால், சுவாச கோளாறு, தோல் நோய், அரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.



இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "இந்த பவுண்டரி குறித்து இதுவரை 11 துறைகளுக்கு மனு அளித்துள்ளோம். கடந்த மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதனை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாசு கட்டுப்பாட்டை தவிர்க்க பவுண்டரி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை உறுதி செய்து விட்டுச் சென்றனர். இதன் பிறகும் அதை சரி செய்யும் முயற்சியில் பவுண்டரி நிர்வாகம் ஈடுபடாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது.

உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாசு கட்டுப்பாட்டு கருவி பொருத்திய பின்னர் பவுண்டரியை இயக்க அனுமதிக்க வேண்டும்." என்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...