சிறுமியை கடத்த முயன்றதாகக் கூறி இளைஞரை கட்டி வைத்து அடித்த திருப்பூர் மக்கள்

திருப்பூர்: சிறுமியை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் இளைஞரை கட்டி வைத்து மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர்: சிறுமியை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் இளைஞரை கட்டி வைத்து மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்புர் சின்னாண்டிபாளையம், ராஜகணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில் குமார்,  உமா தம்பதியர். இவர்கள் இருவரும் பனியன் கம்பனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில், இன்று காலை தனது மகளை அழைத்துக் கொண்டு உமா காட்டுப் பகுதிக்கு சென்றார். சிறுமி தனியாக நிற்பதைப் பார்த்த இளைஞர் ஒருவர் சிறுமியை தூக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துள்ளார்.



இதனைக் கண்ட உமா கூச்சலிட்டதும், அந்த இளைஞர் சிறுமியை கிழே வீசி விட்டு தப்பியோடி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்குள் புகுந்து அந்த இளைஞரை இழுத்து வந்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.



இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவரை மீட்டு மத்திய காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் பெயர் சிவா என்பதும், கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...