வெள்ளியங்காடு பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைவதைத் தடுக்க கோரி பொதுமக்கள் மனு

கோவை: வாசனை திரவிய தொழிற்சாலை அமைவதைத் தடை செய்யக் கோரி வெள்ளியங்காடு பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: வாசனை திரவிய தொழிற்சாலை அமைவதைத் தடை செய்யக் கோரி வெள்ளியங்காடு பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை ஒன்றியதிற்கு உட்பட்ட வெள்ளியங்காடு கரியன்குட்டை பகுதியில் அரோமா பார்ம்ஸ் என்ற வாசனை திரவிய தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. இதனைத் தடை செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்பட்டால் ஆலையின் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நிலத்தில் விடும் போது கோவை, திருப்பூர் மக்களின் குடிநீர் ஆதாரமான பில்லூர் அணை நீர் மாசு அடைவதுடன் குடிநீரை பருக முடியாத சூழ்நிலை ஏற்படும். தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் வேதிப் பொருட்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இந்த ஆலை அமைக்கப்பட்டு வரும் பகுதி பாதுகாக்கப்பட்ட அத்திகடவு காப்புக் காடு பகுதி என்பதால் விலங்குகளின் வாழ்விடம் அழிந்து கேள்விக்குறி ஆகிவிடும். விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மர கொதிகலன் உபயோகிக்கும் பொழுது வெளியேறும் மாசு பொதுமக்களுக்கு நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கும் போது, வறட்சி காலம் மற்றும் விவசாயத்தை நம்பி உள்ளவர்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாகிவிடும். எனவே, இந்த ஆலையைத் திறப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

என்று கூறப்பட்டிருந்தது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...