நீட் தேர்வு முடிவுகள்: முதல் 50 இடங்களில் தமிழகத்துக்கு ஒரே இடம் - கேரளத்துக்கு அதுவுமில்லை..!

டெல்லி: வெளியான நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படியில் முதல் 50 இடங்களைப் பெற்றவர்களில் ஒரே ஒரு இடத்தை மட்டும் தமிழக மாணவி பெற்றுள்ளார்.

டெல்லி: வெளியான நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படியில் முதல் 50 இடங்களைப் பெற்றவர்களில் ஒரே ஒரு இடத்தை மட்டும் தமிழக மாணவி பெற்றுள்ளார்.

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 6-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து 1,14,602 பேரும், நாடு முழுவதும் 12,69,922 பேரும் இந்த தேர்வை எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. முடிவுகளின் அடிப்படியில், 7,14,562 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்வெழுதியவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

50 இடங்கள்

நீட் தேர்வில் முதல் ஐம்பது இடங்களைப் பிடித்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழக மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் ஐம்பது இடங்களை தமிழகத்தை சேர்ந்த வேறு எந்த மாணவர்களும் பிடிக்கவில்லை. இதில் டெல்லி அதிகபட்சமாக எட்டு இடங்களைப் பிடித்துள்ளது. 6 இடங்களைப் பிடித்து குஜராத் மாநிலம் அடுத்த இடத்தில் உள்ளது. ஆந்திர மாநிலம் 5 இடங்களைப் பிடித்து மூன்றாவது இடத்தில் உள்ளது.





கல்வி பெற்றவர்கள் விழுக்காட்டில் நாட்டிலேயே என்றும் முதலிடம் பிடிக்கும் கேரளா மாநிலம் இந்த முதல் ஐம்பது இடங்களில் ஒரு இடத்தைக் கூட பிடிக்கவில்லை. அதே நேரத்தில், தேர்வு எழுதியவர்களில் 67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...