குடிச்சிட்டு பைக்ல போனாதான பிடிப்பீங்க, நாங்க சைக்கிளில் போவோம்: போலீசாரிடம் சிக்காமல் இருக்க குடிமகன்களின் புது யுக்தி!

கோவை: மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டி போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க மது அருந்துவோர் மிதிவண்டி பயன்படுத்தி புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.


கோவை: மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டி போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க மது அருந்துவோர் மிதிவண்டி பயன்படுத்தி புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.



கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறிப்பாக செல்வபுரம், புலியகுளம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் சாலை, ஆகிய பகுதிகளில் அன்மை காலமாக டாஸ்மாக் கடை, பார் போன்ற பகுதிகளில் மிதிவண்டிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. சிலர் மது அருந்திவிட்டு மிதிவண்டியை எடுத்துச் சென்றனர்.

இது குறித்து மது வாங்க வந்த ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், "காவல்துறையின் சோதனை கோவை மாநகரம் முழுவதும் அதிகமாக உள்ளது. மது வாங்கி வீட்டிலோ அல்லது நண்பர்கள் அறையிலோ என்னால் அருந்த முடியாத சூழ்நிலை உள்ளது. பெயிண்டர் வேலை செய்யும் நான் மாலை நேரத்தில் உடல் வலிக்காக மது அருந்துகிறேன். அதுவும் பாரில் தான் அருந்த முடியும். ஆகையால் மோட்டார் பைக்கிற்கு பதிலாக மிதிவண்டியில் வந்து அருந்திவிட்டு செல்கிறேன். காவல்துறை என்னிடம் சோதனை செய்வதில்லை." என்றார்.

மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கினால் தானே பிரச்சினை, மிதிவண்டியில் வந்தால் காவல்துறையால் என்ன செய்ய முடியும் என சில மது பிரியர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.



இன்னும் சிலர் மது அருந்திவிட்டு மிதி வண்டி ஒட்டமுடியாமல் அதனை தடுமாறி தள்ளிக்கொண்டே செல்கின்றனர். இது போன்ற சம்பவங்களால் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் அருள்ராஜ் கூறுகையில், "காவல்துறையின் நடவடிக்கையால் அனைவரும் ஓரளவு ஹெல்மட் அணிய ஆரம்பித்துவிட்டனர். குடித்துவிட்டு வண்டி ஒட்டுவதும் ஒரளவு குறைந்து விட்டது. ஆனால், தற்போது மிதிவண்டியைப் பயன்படுத்தி குடிக்க ஆரம்பித்துவிட்டனர். காவல்துறை இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

இது குறித்து கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் கூறுகையில், "மிதிவண்டியில் குடித்துவிட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து சட்டத்தில் இடமில்லை. அதே நேரம் அவர்கள் பொது இடங்களில் மது அருந்தினாலோ அல்லது தகராறு செய்தாலோ சட்டம் மற்றும் ஒழுங்கு துறை காவலர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். 

தற்போது நாங்கள் குடித்துவிட்டு மிதிவண்டியில் வருபவர்களிடம் எச்சரிக்கை செய்து வருகிறோம். போக்குவரத்து சட்டத்தில் இது குறித்து மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." என்றார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...