சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு திருப்பூர், நீலகிரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர்: உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மற்றும் நீலகிரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருப்பூர்: உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மற்றும் நீலகிரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆண்டுதோறும் ஜீன் மாதம் 5-ம் தேதி உலக சுற்று சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூரில் பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்றனர். அமர்ஜோதி பகுதியில் தொடங்கிய இந்த பேரணி நல்லூர் வரை சென்றது. 



இதேபோல் திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம் சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.



நீலகிரி 

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் பசுமை கலாம் அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா தலைமை சுற்று சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்டீபன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பசுமை கலாம் அமைப்பின் நிர்வாகி நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டார். 



தொடர்ந்து பள்ளி மாணவர்களிடையே அவர் பேசுகையில், "ஊட்டியை 'பியூட்டி'யாக வைப்பது உங்களது டியூட்டி. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் ஆலோசனைப் படி இதுவரை 30 லட்ச மரக்கன்றுகள் தமிழகத்தின் பள்ளி கல்லூரிகளில் நடப்பட்டுள்ளது. தொடர்ந்து, மரம் நடும் பணிகள் மேற் கொள்ளப்படும்." என்றார். 



முன்னதாக, பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதி மொழியும் எடுக்கப்பட்டது. பின்னர் பசுமை ரத விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ரவி, மாவட்ட வன அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...