"உங்கள் பிரச்சனைகளை அரசியல்வாதிகளிடம் கூறுங்கள்": முற்றுகையிட்ட மக்களிடம் நடிகர் விவேக் பதில்

நீலகிரி: நீலகிரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து முற்றுகையிட்ட பொதுமக்களிடம், உங்களது பிரச்சனைகளை அரசியல்வாதிகளிடம் கூறுங்கள் என நகைச்சுவை பாணியில் பதிலளித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து முற்றுகையிட்ட பொதுமக்களிடம், உங்களது பிரச்சனைகளை அரசியல்வாதிகளிடம் கூறுங்கள் என நகைச்சுவை பாணியில் பதிலளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பல பகுதிகளில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நகைச்சுவை நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முதற்கட்டமாக, உதகையில் உள்ள ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் விழாவில் பங்கேற்ற அவர், காந்தள் பகுதியில் உள்ள கஸ்தூரி பாய் காலனிக்கு குப்பைகள் சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார்.

அங்கு நிகழ்ச்சியை துவக்கி வைக்க இருந்த நிலையில், அப்பகுதி மக்கள் நடிகர் விவேக்கை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் தாங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும், கழிப்பறை வசதிகள் ஏதும் சரிவர பராமரிப்பது இல்லை என நடிகர் விவேக்கிடம் கோரிக்கை வைத்தனர்.



இதை சற்றும் எதிர்பாராத விவேக், 'தான் எந்த விதமான அரசியல் கட்சியையும் சாராதவன், ஐயா அப்துல்கலாம் பாணியில் சமூக பணிகளை மேற்கொள்பவன், அதனால், உங்கள் பிரச்சனைகளை இங்கு உள்ள அரசியல்வாதிகளிடம் கூறுங்கள்' என நகைச்சுவை பாணியில் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.



Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...