கல்விக் கட்டணம் செலுத்தாத 1-ம் வகுப்பு மாணவன் வெளியேற்றம் : பள்ளியைக் கண்டித்து மாணவன் தந்தையுடன் தர்ணா

திருப்பூர்: திருப்பூரில் ரூ.20 ஆயிரம் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து 1-ம் வகுப்பு மாணவன் தந்தையுடன் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் ரூ.20 ஆயிரம் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து 1-ம் வகுப்பு மாணவன் தந்தையுடன் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் தனது மகன் காந்திஜியை அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கட்டாய இலவச கல்விச் சட்டத்தின்கீழ் சேர்த்துள்ளார். இந்தாண்டு 1-ம் வகுப்பு பயிலும் அந்த மாணவனை இன்று பள்ளி நிர்வாகம் கல்விக்கட்டனம் செலுத்தவில்லை எனக் கூறி வெளியே அனுப்பியுள்ளது. இதனையறிந்து கேட்க வந்த தந்தையின் இருசக்கர வாகனத்தின் சாவியையும் பள்ளி நிர்வாகம் பிடுங்கி வைத்துள்ளது. இதனால், மனமுடைந்த மாணவனும், அவனது தந்தையும் பள்ளிக்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாணவன் காந்திஜி எழுது பலகையில் பள்ளிக்கு உள்ளே விடுங்க என்ற வாசகத்தை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி சாந்தியிடம் கேட்டபோது, 'கல்விக்கட்டணம் மட்டுமே அரசு செலுத்தும். பள்ளி விதிமுறைகளின்படி பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்,' எனத் தெரிவித்தார்.

திருப்பூரில் கட்டாய இலவச கல்விச்சட்டம் முறையாக தனியார் பள்ளிகள் கடைபிடிப்பதில்லை. இதனை மாவட்ட கல்வித்துறை கண்டு கொள்வதில்லை என பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பழனிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...