பெண் சுதந்திரத்தை வலியுறுத்தி 3,000 கி.மீ., தூரம் பெண்ணின் இருசக்கர சாகச வாகனப் பயணம் : உதகையில் தொடக்கம்

நீலகிரி: இயற்கையை பாதுகாக்கவும், பெண்களுக்கு சுதந்திரத்தை வலியுறுத்தியும் இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணத்தை பெண் ஒருவர் உதகையில் தொடங்கினார்.

நீலகிரி: இயற்கையை பாதுகாக்கவும், பெண்களுக்கு சுதந்திரத்தை வலியுறுத்தியும் இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணத்தை பெண் ஒருவர் உதகையில் தொடங்கினார். 

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவரும், தற்போது அன்னூர் பகுதியில் வசித்து வருபவர் சைபி. இவர், இருசக்கர வாகனத்தில் 5 மணி நேரத்தில் 250 கி.மீ. தூரத்தை நின்ற படியே இயக்கி சாதனை படைத்துள்ளார். இவர், தற்போது இயற்கையை பாதுகாக்கவும், மரங்களை நடவு செய்யவும், பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கவும், பெண் சுதந்திரம் என்பதை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்கள் வழியாக சென்று சென்னையில் பயணத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று உதகை சேரிங்கிராஸ் பகுதியில் சைபி, தனது விழிப்புணர்வு வாகனப் பயணத்தை தொடங்கினார். 

முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற இருவர் பயணத்தை துவக்க வேண்டும். ஆனால், தற்போது நான் மட்டும் செல்ல இருப்பதால் கின்னஸ் புத்தகத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. வரும் காலங்களில் எனக்கு சவாலாக யாராவது வந்தால், அப்போது கின்னஸ் புத்தகத்திற்கு விண்ணப்பிக்க உள்ளேன். தற்போது நான் இருசக்கர வாகனத்தில் சாகச பயணங்களை மேற்கொண்டு வருவதைக் கண்டு பல பெண்கள், தற்போது இருசக்கர சாகச பயணப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவலை தனக்கு செல்போன் மூலம் தெரிவித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றார். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...