பத்து வயது சிறுமையை கடத்த முயற்சி: பொதுமக்களிடம் சிக்கினார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 5 வகுப்பு மாணவியை கடத்திச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 5 வகுப்பு மாணவியை கடத்திச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

காங்கேயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் பள்ளி முடிந்து பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவரிடம் ஒரு வடமாநில வாலிபர் பேச்சு கொடுத்தபடி நடந்து வந்தார். 

பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் பிஸ்கட் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், அங்கிருந்து சிறுமியை அழைத்துக் கொண்டு சென்னிமலை சாலை வழியாக நடந்து சென்றார். இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் சந்தேகம் அடைந்து சிறிது தூரம் விட்டு பின்பு இருவரையும் தடுத்து விசாரிக்க முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அழைத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமி தாராபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் என்றும் அந்த இளைஞர் பீகாரை சேர்ந்த ஜீஜிந்திரன் (25) என்பதும், பழைய கோட்டை சாலையில் உள்ள தனியார் அரிசி ஆலையில் வேலை செய்வதும் தெரியவந்தது. 

மேலும், அவர் மாணவியை கடத்தி செல்ல முயன்றதும் விசாரணையில் அம்பலமானது. பின்னர், மாணவியை காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

இது தொடர்பாக, காங்கேயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜீஜிந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...