பொறியியல் கல்லூரிகளுக்குள் 'நீட்'டை புகுத்த முயற்சி: கோவையில் வைகோ பேட்டி

கோவை: மத்திய அரசின் நீட் தேர்வு திட்டமிட்ட நயவஞ்சக நடவடிக்கை என்றும், பொறியியல் கல்லூரிகளுக்குள்ளும் இந்த தேர்வை புகுத்த முயற்சி செய்வதாகவும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: மத்திய அரசின் நீட் தேர்வு திட்டமிட்ட நயவஞ்சக நடவடிக்கை என்றும், பொறியியல் கல்லூரிகளுக்குள்ளும் இந்த தேர்வை புகுத்த முயற்சி செய்வதாகவும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதால் திருச்சியில் மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கின்றது. உலக புகழ் பெற்ற மருத்துவர்கள் பலர் உள்ளூர் பள்ளியில் படித்தவர்கள் என்பதை நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுபவர்கள் உணர வேண்டும்.

மத்திய அரசின் நீட் தேர்வு திட்டமிட்ட நயவஞ்சக நடவடிக்கை. இந்த தேர்வினை பொறியியல் கல்லூரிகளுக்குள்ளும் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்கின்றனர். நீட் தேர்வு வளரும் பிள்ளைகளின் கல்வியை, எதிர்காலத்தை பாதிக்கும். இதனால், மாணவர்கள் பலர் மனதுக்குள் நொந்து கொண்டு இருக்கின்றனர்.

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் என்பவர் ஆலையை அனுமதி வாங்கி கண்டிப்பாக நடத்துவோம் என்று தெரிவிக்கின்றார். ஆலையை மூடுவதாக கூறுவது தமிழக அரசின் சதி நாடகம். மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை காட்டி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது சரியான நடவடிக்கை அல்ல.

இதனால், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கி விட வாய்ப்பு உள்ளது. சட்டசபையைக் கூட்டி, மூடுவதற்கான காரணங்களை விரிவாக சொல்லி, ஆலையை மூட சட்டம் கொண்டு வந்த பின்னர், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். அப்போது தான் மீண்டும் ஆலையைத் திறக்க முடியாது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே போராடி வருகின்றோம் நாங்கள் சமூக விரோதிகளா? சுட்டுக் கொல்லப்பட்ட மக்கள் சமூக விரோதிகளா? ஸ்டெர்லைட் எங்கு லைசென்ஸ் வாங்கினாலும், அதற்கு எதிராக போராடுவோம். மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியை விட உக்கிரமான போராட்டம் தமிழகத்திலும் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...