தேசிய படுக பார்ட்டி சார்பில் வரும் 13-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்

நீலகிரி: பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 13-ம் தேதி குன்னூரில் தேயிலை வாரியம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தேசிய படுக பார்ட்டி அறிவித்துள்ளது.

நீலகிரி: பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 13-ம் தேதி குன்னூரில் தேயிலை வாரியம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தேசிய படுக பார்ட்டி அறிவித்துள்ளது. 



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக, தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. இந்த தேயிலை விவசாயத்தில் சுமார் 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல், தேயிலை விவசாயிகள் பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய விலை இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களை விற்று விட்டு தங்களது வாழ்வாதாரத்திற்காக சமவெளி பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், பசுந்தேயிலைக்கு உரிய விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்க வலியுறுத்தி வரும் 13-ம் தேதி குன்னூரில் செயல்பட்டு வரும் தேயிலை வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக தேசிய படுகர் பார்ட்டி அறிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தேசிய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு துவக்கி வைக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...