சிறுவாணி சாலையில் மேலும் 9 மரங்கள் அகற்றும் முடிவு கைவிடல்

கோவை: சாலை விரிவாக்கப் பணிக்காக சிறுவாணி சாலையில் இருந்த மரங்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், ஏற்கனவே பல மரங்கள் வெட்டும் பணி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், மேலும் 9 மரங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.


கோவை: சாலை விரிவாக்கப் பணிக்காக சிறுவாணி சாலையில் இருந்த மரங்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், ஏற்கனவே பல மரங்கள் வெட்டும் பணி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், மேலும் 9 மரங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. 

கோவை மாவட்டம் சிறுவாணி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அந்த வழியாக உள்ள 83 மரங்களை வெட்ட வருவாய்துறையினர் முடிவு செய்திருந்தனர். முன்னதாக, காளம்பாளையம் முதல் இருட்டுப்பள்ளம் வரையில் சாலை விரிவாக்கத்திற்காகப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் 200 மரங்களை வெட்டத் திட்டமிட்டிருந்தனர். முதற்கட்டமாக 7 மீ. சாலையை 10 மீட்டராக அகலப்படுத்துகின்றனர். சாலைகளின் இருபுறமும் தலா 1.5 மீ விரிவாக்கம் செய்யப்படுகிறது. 



போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த சாலை, அவிநாசி, திருச்சி, பொள்ளாச்சி, பாலக்காடு, சத்தி மற்றும் மேட்டுப்பாளையம் போன்ற முக்கிய சாலைகளையும் இணைப்பதில்லை. எனவே, மரங்களை வெட்டி, சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், 200 மரங்களை வெட்டத் திட்டமிட்டிருந்த தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் 83 மரங்களை மட்டுமே அகற்ற முடிவு செய்தனர். 

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, மேலும் ஆய்வு நடத்திய நெடுஞ்சாலை அதிகாரிகள், மேலும் 39 மரங்களை வெட்டாமல், சாலையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வின் போது ஓசை அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 



இதையடுத்து, மேலும், 9 மரங்களை அகற்றாமல் சாலையை விரிவாக்கம் செய்ய இருப்பதாக நெடுஞ்சாலைத் துறையினர் அறிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த முடிவு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...