கோவையில் இளம் பத்திரிக்கையாளர்களுக்கான 'வாசிப்பை நேசிப்போம்' நிகழ்ச்சி

கோவை: இளம் பத்திரிக்கையாளர்களுக்கான வாசிப்பு தன்மையை ஊக்கப்படுத்தும் வகையில், 'வாசிப்பை நேசிப்போம்' என்ற நிகழ்ச்சி கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது.



கோவை: இளம் பத்திரிக்கையாளர்களுக்கான வாசிப்பு தன்மையை ஊக்கப்படுத்தும் வகையில், 'வாசிப்பை நேசிப்போம்' என்ற நிகழ்ச்சி கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது.

இளம் பத்திரிக்கையாளர்கள் வாசிப்பு தன்மையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை பிரஸ் கிளப், அறிவுக்கேணி மற்றும் வாங்க படிக்கலாம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இன்றைய காலகட்டத்தில் புத்தகத்தின் தேவையையும், அதன் வலிமையையும் இளம் பத்திரிகையாளர்கள் உணரும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது.

இதில் அறிமுக உரையாகப் பேசிய எழுத்தாளர் சி.ஆர். இளங்கோவன் கூறும்போது:- நான் கல்லூரி காலம் முடிந்த பின்பு கோவையின் வரலாறு என்று ஒரு புத்தகத்தை எழுதினேன். அதன் தொடர்ச்சியாக வாசகர்கள் இந்தப் புத்தகத்தில் இருந்த கோவையின் தகவல்களை என்னிடம் ஆழமாகக் கேட்டனர் இதனால், இன்னும் தகவல்களை தேடி அலைந்தேன். பின்னர் தொடர்ச்சியாக புத்தகங்கள் எழுதினேன், என்றார்.

தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். கே. விஜயகார்த்திகேயன் பேசுகையில்," டாக்டர், ஐ.ஏ.எஸ். அதிகாரி, எழுத்தாளர் என்பதை எல்லாம் விட வாசிப்பதின் மூலம் சமூகத்தில் முன்னேறிய மாணவனாக இருப்பதை நான் பெருமை கொள்கிறேன். சமூக விழிப்புணர்வுக்கு சாவியாக இருப்பது புத்தகம்தான். ஆகவே, வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தகவல் என்பது ஒரு ஆயுதமாக உள்ளது," இவ்வாறு கூறினார்.



தேசிய விருது பெற்ற பத்திரிக்கையாளர் சே. சேவியர் செல்வகுமார் கூறியதாவது :- இளம் பத்திரிகையாளர்கள் புத்தகங்களை அதிகமாக வாசிக்க வேண்டும். நாங்கள் இளம் வயதில் படித்த புத்தகங்கள் தான் இன்று எங்களை வளமைப்படுத்தியுள்ளது. துல்லியமாக செய்திகளை பதிவு செய்ய வாசிப்பு அவசியம். "சிறுவாணி புத்தகம்" கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டும், என்றார். இந்த நிகழ்ச்சியில் இளம் பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...