அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள்: அரசின் அறிவிப்பிற்கு வரவேற்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் நேற்று பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இன்னும் ஒரு மாதத்திற்குள் தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் நூலகங்களைப் பராமரிப்பதற்கென தற்போது தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசின் இந்த அறிவிப்பு குறித்து கோவையில் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் நடத்தி வரும் கனகராஜ் கூறியதாவது :- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதனால், கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை எளிய மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது.

30 வருடங்களுக்கு முன் தமிழக அரசு சார்பாக சென்னையில் சிறப்பு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டு ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக இலவச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. இங்கு பயிற்சி பெற்ற பலர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். குறிப்பாக, கடந்த 8 வருடங்களில் அதிக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை உருவாக்கிய சாதனை தமிழகத்திற்கு உள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் தொடங்குவதால், தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்," என்றார்.

குறிப்பாக, வழக்கமான பள்ளி ஆசிரியர்களை வைத்து தேர்வு எழுதுவோருக்கு பயிற்சி கொடுக்காமல், ஐ.ஏ.எஸ்., தேர்வில் அனுபவமிக்கவர்களை கொண்டு பயிற்சியளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐ.ஏ.எஸ்., பயிற்சியாளர் கனகராஜ் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...