பருவமழையை பயன்படுத்தத் தவறுகிறதா வெள்ளலூர் ராஜவாய்க்கால்: புதர்கள், ஆக்கிரமிப்புகள்தான் காரணமா..?

கோவை: கோவையில் கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் புதர்களால் மண்டிக்கிடக்கும் வெள்ளலூர் ராஜவாய்க்காலில் தண்ணீர் பாய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவையில் கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் புதர்களால் மண்டிக்கிடக்கும் வெள்ளலூர் ராஜவாய்க்காலில் தண்ணீர் பாய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், கோவை மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நொய்யல் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர், நேற்று மாலை வெள்ளலூர் ராஜவாய்க்காலை அடைந்துள்ளது.



பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, குளங்கள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளைக் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மேற்கொண்டனர். ஆனால், இந்த சீரமைப்பு பணிகள் வீணாகியதை உணர்த்தும் வகையில், வாய்க்காலில் மீண்டும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.



மேலும், ராஜவாய்க்கால் பகுதிகளில் இன்னும் ஆக்கிரமிப்பில் 200 வீடுகள் உள்ளது.

எனவே, பருவமழையினால் கிடைக்கும் தண்ணீரானது, தடையில்லாமல் பாய வழி செய்யும் வகையில், நொய்யலுடன் பயணிக்கும் குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மீண்டும் சீரமைப்பு பணியில் ஈடுபட ஆயத்தமாகியுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...