வால்பாறையில் தொடரும் கனமழை: தமிழக - கேரள சாலையில் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழையால், தமிழக - கேரள சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழையால், தமிழக - கேரள சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் பெய்து வரும் நிலையில், வால்பாறையில் பல இடங்களில் சாலைகள் மண் சரிந்து சேதமடைந்துள்ளன. இந்நிலையில், வால்பாறை நகரை ஒட்டிச் செல்லும் நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டது. மேலும், சிறுவர் பூங்கா பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.



இதேபோல, நகராட்சி சுற்றுலா மாளிகையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வால்பாறையிலிருந்து சோலையார் அணை வழியாக கேரள செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணியளவில் வறட்டுப்பாறை என்ற இடத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மேற்பகுதியில் இருந்து ராட்சத மரங்கள் மற்றும் பாறைகள் சாலையில் விழுந்தன. வார இறுதி நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இச்சாலையில் சென்ற வண்ணம் இருந்தன. அதிர்ஷ்டவசமாக எந்த விபத்தும் ஏற்படவில்லை.



இதேபோல, சோலையார் அணைக்கு செல்லும் மாற்றுப்பாதையான பன்னிமேடு சாலையிலும் மண்சரிவு ஏற்பட்டதால் வால்பாறை - சோலையார் அணை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் சாலையில் கிடக்கும் மண், கற்களை அகற்றினர். இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனிடையே, வால்பாறையில் பலத்த மழை காற்று காரணமாக காமராஜ் நரில் மல்லிகா என்பவரது வீடு இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...