பரீட்சார்த்த முறையில் 'ஓஃபோ' மிதிவண்டி பகிர்தல் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் - ஸ்மார்ட் சிட்டி அதிகாரி

கோவை: சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்த 'ஓஃபோ' மிதிவண்டி பகிர்தல் திட்டம், விரைவில் குறைந்தபட்ச கட்டணத்தோடு முழு பயன்பாட்டிற்கு வர இருப்பதாக ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்த 'ஓஃபோ' மிதிவண்டி பகிர்தல் திட்டம், விரைவில் குறைந்தபட்ச கட்டணத்தோடு முழு பயன்பாட்டிற்கு வர இருப்பதாக ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மிதிவண்டி பகிர்தல் திட்டம் கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி கோவை மாநகராட்சியால் தொடங்கப்பட்டது. சுமார் ரூ.38 கோடி முதலீடு செய்து பரீட்சார்த்த முறையில் இத்திட்டத்தை செயல் படுத்த ஓஃபோ என்கின்ற சீன நிறுவனம் முன்வந்தது.

2000 மிதிவண்டிகள்

இதனையடுத்து, சோதனை அடிப்படையில் பல்வேறு கல்லூரி வளாகங்களில் ஓஃபோ மிதிவண்டி பகிர்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. பின்னர், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 2000 மிதிவண்டிகளை மாநகர பகுதிகளில் அறிமுகம் செய்தது.

மிதிவண்டி பகிர்தல் திட்டம் குறித்த மக்களின் மனநிலையையும், பயன்பாடு குறித்த தகவல்களை திரட்டவும் சோதனை அடிப்படையில் இத்திட்டம் கடந்த மூன்று மாதங்களாக செயல்படுத்தப்பட்டு வந்தது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவக் கூடிய மிதிவண்டி பகிர்தல் திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும்பாலானோர் ஓஃபோ மிதிவண்டிகளை முறையாக பயன்படுத்தி வந்தனர். 

சேதம் 

ஆனால், வெகுசிலர் மிதிவண்டிகளை சேதப்படுத்தி வீட்டுக்குள் வைத்துக் கொண்டனர். ஜி.பி.எஸ் உதவியோடு இதனை கண்டறிந்த ஓஃபோ நிறுவனத்தினர் அவற்றை திரும்பப் பெற்று, பழுதை சரி செய்தனர்.



இந்நிலையில், ஓஃபோ நிறுவனத்தினர் தங்களது சோதனைகளை முடித்துக் கொண்டு, மிதிவண்டி பயன்பாடு குறித்த தகவல்களை ஆய்வு செய்ய தொடங்கியது. இதனால், மிதிவண்டி பகிர்தல் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறுகையில், "சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்த மிதிவண்டி பகிர்தல் திட்டம், கோவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திட்டம் குறித்து சிறியவர் முதல் முதியவர் வரை அனைத்து தரப்பினரின் கருத்துகளும், பயன்பாடு பற்றிய தகவல்களும் ஓஃபோ நிறுவனத்தால் திரட்டப்பட்டுள்ளது. 

விரைவில், அந்த தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு முழு பயன்பாட்டிற்கான திட்டம் அறிவிக்கப்படும். குறைந்த கட்டண சேவையோடு மீண்டும் மிதிவண்டி பகிர்தல் திட்டம் நகரில் தொடங்கப்படும்." என்றார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...