செய்தியாளர் மீது வழக்கு: கோவை அனைத்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் ; ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவை: புதியதலைமுறை செய்தியாளர் மீது கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிகையாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: புதியதலைமுறை செய்தியாளர் மீது கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிகையாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கடந்த வெள்ளிக்கிழமை கோவை - அவினாசி சாலையில் உள்ள நவ இந்தியா பகுதியில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் விவாத மேடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அமீர் பேசுகையில் அங்கிருந்த பா.ஜ.க.,வினர் ரகளையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீசார், அமீர் மீதும், புதிய தலைமுறை மீதும், அதன் செய்தியாளர் சுரேஷ் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதே போல், விகடன் இணையதள செய்தியில், கோவையில் கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், முதலமைச்சருடன் இருப்பது போன்ற செய்தி புகைப்படத்துடன் வெளியானது. இது, தொடர்பாக, ஆனந்த் என்பவர் அளித்த புகாரின் பேரில், விகடன் நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.



இந்த இரு சம்பவங்களுக்கும், தமிழக அளவில் கடுமையான கண்டனங்கள் எழுந்தது. இந்த நிலையில், தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும், விகடன் பத்திரிக்கை மீதும், புதியதலைமுறை செய்தியாளர் மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கருப்பு உடை அணிந்தும், வாயில் கருப்பு துணி கட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஊடக குரல் வலையை நசுக்கும் வகையில் செயல்படும் மாநகர காவல்துறைக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த பத்திரிகையாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியதோடு, மாநில அரசிடம் பத்திரிகையாளர்களின் நிலையை உணர்த்தி உடனடியாக வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...