சோமனூர் பேருந்துநிலைய மேற்கூரை இடிந்த விபத்து : இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி காயமடைந்தவர்கள் மனு

கோவை : சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை : சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கோவையை அடுத்த சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-ம் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25,000-ம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம், இன்னமும் அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.



குறிப்பாக, விபத்தில் காயமடைந்த லதா என்ற கல்லூரி மாணவிக்கு கால் ஒன்று அகற்றப்பட்டதோடு, இதுவரை ரூ. 10 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பேருந்து மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், படுகாயமடைந்து தற்போதும் சிகிச்சை பெற்று வரும் 7 பேர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், 'படுகாயமடைந்தவர்கள் இன்றும் உடல்நிலை தேராமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். எனவே, தங்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதோடு, அரசு வேலையும் வழங்க வேண்டும்,' என வலியுறித்தியுள்ளனர். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...