அரசு பள்ளிகளை பாதுகாக்க கோரி முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை

கோவை: அரசுப் பள்ளிகளை பாதுகாக்க கோரியும், தனியார் பள்ளி கட்டணக் கொள்ளையை தடுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் மாசிலாமணி கமிட்டியை அமைத்து தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை உடனடியாக நிர்ணயம் செய்யவும் வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: அரசுப் பள்ளிகளை பாதுகாக்க கோரியும், தனியார் பள்ளி கட்டணக் கொள்ளையை தடுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் மாசிலாமணி கமிட்டியை அமைத்து தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை உடனடியாக நிர்ணயம் செய்யவும் வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மேலும், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பி கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து தனியார் பள்ளிகளிலும் உறுதி செய்திட வலியுறுத்தியும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாணவர்கள் கோஷமிட்டனர். 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் பீளமேடு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் கழிப்பறை உபயோகிக்கும் வண்ணம் தரமாக இல்லை என தெரியவந்துள்ளதாகவும், ஆண்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை என்பதும் விளையாட்டு மைதானம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.



மேலும், ஆண்டிபாளையம் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ள சுற்றுச்சுவர் மிகவும் பழுதடைந்தும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சேரிபாளையம் உயர்நிலைப் பள்ளியில் இந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி 95 சதவீதமாக இருப்பதாகவும், ஆனாலும், அந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி சுற்றுச்சூழல் மற்றும் கல்வி கற்க போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பது தெரியவந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவினாசி சாலையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் போதுமான சுகாதார பணிகள் மாணவர்களே மேற்கொள்வதாகவும், அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளை சரி செய்து, மாணவர்கள் கல்வி கற்க வசதியாக அனைத்தையும் சீரமைக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது. 

இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...