குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையைக் கண்டித்து 18-ம் தேதி உக்கடத்தில் போராட்டம்

கோவை: உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக குடியிருப்பு பகுதிகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 18-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.



கோவை : உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக குடியிருப்பு பகுதிகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 18-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக உக்கடம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது. 



உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஒப்பணக்கார வீதி முதல் ஆத்துப்பாலம் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பாலம் அமையவிருக்கும் பகுதி அருகே 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. பாலம் கட்டுமானப் பணிகளுக்காக இந்தக் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக் குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனைக் கண்டித்து, உக்கடம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் வரும் 18-ம் தேதி உக்கடம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில், கூட்டியக்கத்தில் அங்கம் வகிக்கும் தந்தை பெரியார் திராவிடக் கழகம், திராவிட விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை, பீபுள் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் பங்கேற்க இருக்கின்றன.



இந்த நிலையில், உக்கடம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் உக்கடம் பகுதியில் கட்டப்படும் பாலம் குறித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரஸ் கிளப் அரங்கில் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...