காங்கிரசிடம் கம்யூனிஸ்ட் எப்போதும் சரணடையாது : கோவையில் சுதாகர் ரெட்டி பேட்டி

கோவை : அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சரணடையாது என அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கோவை : அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சரணடையாது என அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் மாநில குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயனடைந்துள்ளது. அதேசமயம், அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. 

பிரதமர் மோடிக்கு மாவோயிஸ்ட்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கடிதம் கைப்பற்றப்பட்டதில், முரண்பாடுகள் உள்ளன. மதச்சார்பின்மை, ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க.,வை வீழ்த்துவோம். ஆனால், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தலைமை எங்களுக்கு தேவையில்லை. தலைவர்களை விட கொள்கைகளே மாற்றத்தை ஏற்படுத்தும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸிடம் சரணடையாது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அ.தி.மு.க., அரசு பா.ஜ.க.,வின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் இணை செயலாளர்களாக தனியார் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமிக்கலாம் என்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் உள்ளவர்களைக் கொண்டு வர முயற்சி நடக்கிறது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...