கூடலூர் அருகே காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானை : சிகிச்சை அளிப்பதில் காலந்தாழ்த்தும் வனத்துறையினர்

நீலகிரி : கூடலூர் அருகே வெடிவிபத்தில் காயம் அடைந்து உயிருக்குப் போராடிய வரும் காட்டு யானைக்கு, சிகிச்சை அளிப்பதில் வனத்துறையினர் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

நீலகிரி : கூடலூர் அருகே வெடிவிபத்தில் காயம் அடைந்து உயிருக்குப் போராடிய வரும் காட்டு யானைக்கு, சிகிச்சை அளிப்பதில் வனத்துறையினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். 

பந்தலூர் தாலுகா கன்னம்பள்ளி தனியார் தோட்டம் அருகே கடந்த சில தினங்களாக காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்து வந்துள்ளது. சுமார் 12 வயதுடைய அந்த ஆண்யானை உடல் நலக்குறைவு ஏற்பட்டு, வாய் பகுதியில் காயத்துடன் உணவு உண்ண முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 



இந்நிலையில், நேற்று காலை இந்த யானையின் உடல்நலம் மிகவும் மோசமடைந்து தள்ளாடியபடி, உயிருக்கு ஆபத்தான நிலையில் தேயிலை தோட்ட சாலையில் வந்து விழுந்து கிடந்தது. கடந்த சில நாட்களாகக் காயத்துடன் திரிந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதில் வனத்துறையினர் அலட்சியம் காட்டியுள்ளனர். மேலும், கூடலூர் மற்றும் முதுமலை பகுதியில் கால்நடை மருத்துவர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் இருந்து கால்நடை மருத்துவரை வனத்துறையினர் அழைத்துள்ளனர். 

முதுமலை புலிகள் காப்பகத்தில் நிரந்தரமாக இருக்கும் கால்நடை மருத்துவர் தான் காயம் ஏற்படும் விலங்குகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பார். தற்போது, முதுமலை புலிகள் காப்பகத்தில் கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளதால், யானைக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

தனியார் தோட்ட உரிமையாளர்கள் பன்றிகளை விரட்டக் கிழங்கில் வெடிப்பொருளை நிரப்பி திருட்டுத்தனமாக வெடிக்க வைப்பார்கள், அவ்வாறு வைக்கப்பட்ட வெடிபொருட்களை நிரம்பிய கிழங்கை உண்ட யானைக்கு இப்படி காயம் ஏற்பட்டிருக்கலாம் அல்லது தேயிலை செடிகளுக்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தாலும் வாய்ப்புண் ஏற்பட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.

கடந்த 3-ம் தேதி சேரங்கோடு படச்சேரி பகுதியில் இதேபோல வாயில் காயத்துடன், உடல் நலம் குன்றிய நிலையில் ஊருக்குள் விழுந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அடுத்தடுத்து, யானைகள் உடல்நலம் குன்றி பிரச்சினைக்கு உள்ளாவதால் வனத்துறையினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...