மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் நீரில் மூழ்கின

கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தொடர் வெள்ளப் பெருக்கால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தொடர் வெள்ளப் பெருக்கால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியதை அடுத்து கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பவானி ஆற்றில் அணையின் உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த நான்கு நாட்களாக அணைக்கான நீர் வரத்து அதிகரித்து கொண்டே இருந்த நிலையில், நேற்று இரவு 25 ஆயிரம் கன அடி தண்ணீரானது பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக பவானி ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளியேற்றப்படும் உபரி நீரானது பவானி சாகர் அணையை அடைவதால் பவானி சாகர் அணையின் நீர் மட்டமும் விறு- விறுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையில் இருந்து பத்தாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வாழை

வெள்ளப் பெருக்கு காரணமாக பவானி சாகர் அணையின் நீர் தேக்க பகுதிகள் மற்றும் கரையோரம் உள்ள லிங்காபுரம், காந்தவயல் போன்ற பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த பகுதிகளில் ஆற்றின் நீரோட்டம் அதிகமானதால், கரையோரத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தற்போது தண்ணீரில் மூழ்கி உள்ளன.



கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விவசாயத்திற்கு தண்ணீரின்றி அவதிப்பட்டு வந்த விவசாயிகள் கடன் பெற்று தற்போது உற்பத்தி செய்து வந்த வாழை பயிரும் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும், பவானி சாகர் அணையின் நீர் தேக்க பகுதிகளில் பிரதானமாக விளைவிக்கப்படும் வாழை விவசாயம் இவ்வாண்டு 20 லட்சத்திற்கும் மேலாக இருப்பதால் பவானி ஆற்றில் நீர் வரத்தானது இதே நிலை நீடித்தால் அனைத்து வாழைகளும் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும் என்பதால் விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...