பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை

கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மற்றும் தென்மேற்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மற்றும் தென்மேற்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள், பூங்காக்கள், மேம்பாட்டுப் பணிகள், ஏரிகள், 24 மணி நேர குடி நீர் விநியோகப் பணிகள் குறித்தும்,பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

பருவமழை

தென்மேற்கு பருவமழையையொட்டி மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான மணல் மூட்டைகள் மற்றும் பணியாளர்களை தேவையான இடங்களில் தயார்நிலையில் வைத்திருக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.

மேலும், மாநகராட்சியிலுள்ள குளங்கள், ஏரிகள், குட்டைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்தும், வாய்க்கால்கள் ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்தும், தூர்வாரப்பட்டுள்ள வாய்க்கால்களை பராமரித்தல் குறித்தும், சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் என்.நடராஜன், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் த.ஞானவேல், மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டங்கள்;) எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...