நீலகிரியில் நிலச்சரிவு அபாயம்: வேளாண் பல்கலை., எச்சரிக்கை

கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்புள்ளது.

இதனிடையே, பகல் நேர வெப்ப நிலையானது 28 முதல் 29 டிகிரி செல்சியஸ்-ஆகவும், இரவு நேர வெப்ப நிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ்-ஆகவும் நிலவ வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் 10 முதல் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது. விவசாயிகள் பயிர் அறுவடைகளை சற்று தள்ளிப்போடுவது நல்லதாக இருக்கும்.

கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரமடையும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வால்பாறை, சிறுவாணி போன்ற பகுதிகளில் 20 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.

மழை காரணமாக தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் விவசாய நிலங்களில் வடிகால் அமைப்பது நல்லது. திராட்சை, மஞ்சள் போன்ற விவசாயத்தில் தற்போது பூச்சி தாக்க வாய்ப்புள்ளது தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அரிமானம் ஏற்பட்டு நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் இருக்க வேண்டும்." என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...