சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் அரசு டெண்டர்கள் வழங்கியது குறித்து முதலமைச்சர் மீது தி.மு.க., புகார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் அரசு டெண்டர்கள் ஒதுக்கியது தொடர்பாக தி.மு.க., சார்பில் விஜிலென்ஸ் கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் அரசு டெண்டர்கள் ஒதுக்கியது தொடர்பாக தி.மு.க., சார்பில் விஜிலென்ஸ் கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தின் கஜானா பொதுமக்களுக்கு செயல்படுகிறதோ இல்லையோ, அ.தி.மு.க., அரசின் ஊழலுக்குப் பயன்படுத்தப்பட்டு பகல் கொள்ளை அநியாயமாக அரங்கேறி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் இமாலய டெண்டர் ஊழல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிடில், தி.மு.க., நீதிமன்றத்தை நாட தயங்காது.

நெடுஞ்சாலை துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் மோசடி செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெண்டர்களை வழங்கியது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஜிலென்ஸ் கமிஷனருக்கு தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...